திருவள்ளூரில் பிளஸ் 2 தேர்வு துவக்கம் தமிழ் தேர்வில் 270 பேர் ‘ஆப்சென்ட்’ : பாடியநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்த்தை மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் பார்வையிட்டு ஆய்வு :

பதிவு:2024-03-02 23:03:32



திருவள்ளூரில் பிளஸ் 2 தேர்வு துவக்கம் தமிழ் தேர்வில் 270 பேர் ‘ஆப்சென்ட்’ : பாடியநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்த்தை மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் பார்வையிட்டு ஆய்வு :

திருவள்ளூரில் பிளஸ் 2 தேர்வு துவக்கம் தமிழ் தேர்வில் 270 பேர் ‘ஆப்சென்ட்’ : பாடியநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்த்தை  மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் பார்வையிட்டு ஆய்வு :

திருவள்ளூர் மார்ச் 02 : திருவள்ளூர் மாவட்டத்தில், 2023-24ம் கல்வியாண்டிற்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு, நேற்று முன்தினம் துவங்கியது. திருவள்ளூர் வருவாய் மாவட்டத்தில், 105 மையங்கில், 25,882 பேர் தேர்வு எழுத கல்வித்துறையினரால் அனுமதிக்கப்பட்டனர். 10 மாணவர்கள் மொழிப்பாட விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.அவர்களில் 146 மாணவர்கள் சொல்வதை எழுதுபவர் மூலம் மொழிப்பாட தேர்வினை எழுதினர்.தனித்தேர்வர்கள் பொறுத்த வரையில் 591 தேர்வர்களில் 540 பேர் மொழித் தேர்வினை 11 தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர். இவர்களில் 51 தனித் தேர்வர்கள் பங்குபெறவில்லை

அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வினாத்தாள்கள், 5 மையங்களில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களுக்கு, 24 மணி நேரமும் போலீசார் சுழற்சி அடிப்படையில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

தேர்வு அறையில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில், 80 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் மாவட்டம் முழுவதும் தேர்வு எழுதும் பள்ளிகளுக்கு நேரில் சென்று திடீர் சோதனை நடத்தி மாணவர்கள் பிட் எழுதுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

முதல் நாள் தமிழ் தேர்வில், 25890 மாணவர்களில் 25610 மாணவர்கள் 105 தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர். 270 மாணவர்கள் தேர்வில் பங்குபெறவில்லை மற்றும் 10 மாணவர்கள் மொழிப்பாட விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.மீதம் உள்ள, 25 ஆயிரத்து 612 பேர் தேர்வில் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில்,திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரி வட்டம் பாடியநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்த்தை மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இப்பொதுத் தேர்வுகளுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் 05 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களிலிருந்து 27 வழித்தட அலுவலர்கள் ஆயுதம் தாங்கிய காவலர் உதவியுடன் வாகனம் மூலம் அனைத்து தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் பாதுகாப்பாக ஒப்படைக்கப்படவுள்ளது.தேர்வு எழுதிய மாணவர்கள், தமிழ் தேர்வு எளிதாக இருப்பதாக தெரிவித்தனர்.