தமிழ்நாடு, ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் சட்டவிரோதமாக நடக்கும் மதுபானம் விற்பனை மற்றும் தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்க நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து கலந்தாலோசனை கூட்டம் :

பதிவு:2024-03-22 17:58:14



தமிழ்நாடு, ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் சட்டவிரோதமாக நடக்கும் மதுபானம் விற்பனை மற்றும் தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்க நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து கலந்தாலோசனை கூட்டம் :

தமிழ்நாடு, ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் சட்டவிரோதமாக நடக்கும் மதுபானம் விற்பனை மற்றும் தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்க நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து கலந்தாலோசனை கூட்டம் :

திருவள்ளூர் மார்ச் 22 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்களவை தேர்தல்-2024 முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான த.பிரபுசங்கர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ரா. ஸ்ரீநிவாச பெருமாள் ஆகியோர் தமிழ்நாடு ஆந்திரா மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகள் வழியாக சட்டவிரோதமாக நடக்கும் மதுபானம் விற்பனை மற்றும் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் நடைபெறாமல் கண்காணிக்க சிறப்பு குழு அமைத்து நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து காணொளி காட்சி வாயிலாக திருப்பதி மாவட்ட ஆட்சியர் ஜி.லட்சுமி ஷா, காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ கிருஷ்ண காந்த் பட்டேல் மற்றும் சித்தூர் மாவட்ட ஆட்சியர் ஷான் மோகன் சாகிலி.காவல் கண்காணிப்பாளர் ஜோஸ்வா ஆகியோர்களுடன் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. :

கூட்டத்தில் மாநில எல்லைப் பகுதிகளில் இருந்து மாநிலங்களுக்கு இடையேயான சட்ட விரோத மதுபான விற்பனை தடை செய்வது குறித்தும், எதிர்வரும் மக்களவைத் தேர்தல்-2024 முன்னிட்டு மாநில எல்லைப் பகுதிகளில் இருந்து மாநிலங்களுக்கு இடையான சட்ட விரோத மதுபானம் மற்றும் சட்டவிரோத மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலைகளை கண்டறிவதற்காக சிறப்பு இயக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு மற்றும் உரிமை பெறாத வளாகங்களில் மதுபானங்களை சேமிப்பதில் மாநில கலால் சட்டம் அல்லது பிற சட்டங்களில் வழங்கப்பட்டுள்ள அனைத்து கட்டுப்பாடுகளும் தீவிரமாக அமல்படுத்தப்பட வேண்டும் அத்தகைய இயக்க நடவடிக்கைகளில் தொடர்புடைய அனைத்து சட்ட அமலாக்க முகமைகளுடன் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும். :

திருவள்ளூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள சோதனை சாவடிகள் ஆந்திர மாநிலத்தின் திருப்பதி மற்றும் சித்தூர் எல்லையில் ஒட்டி அமைந்துள்ள எனாவூர், பொம்மாஜிகுளம், நாகலாபுரம் , பொன்பாடி, தேவலாம்பாபுரம் ஆகிய எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகளின் வழியாக வெளி மாநிலத்திலிருந்து சட்டவிரோதமாக மதுபான விற்பனை நடவடிக்கைகளை தவிர்க்கும் பொருட்டு அரசின் அறிவுரைகளை நெறி தவறாமல் பின்பற்றுமாறு மேற்படி மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மதுபான சில்லறை விற்பனை கடை பணியாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கிட வேண்டும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காணொளி காட்சிகள் வாயிலாக திருப்பதி சித்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலந்துரையாடினர்.இதில் கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி ஒ.என். சுகபுத்ரா.உதவி பயிற்சி ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வதஸ் கலந்து கொண்டனர்.