திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு மையத்தில் தேர்தல் பணிகள் : மாவட்ட தேர்தல் அலுவலர் த.பிரபுசங்கர் ஆய்வு :

பதிவு:2024-03-22 18:00:44



திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு மையத்தில் தேர்தல் பணிகள் : மாவட்ட தேர்தல் அலுவலர் த.பிரபுசங்கர் ஆய்வு :

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு மையத்தில் தேர்தல் பணிகள் : மாவட்ட தேர்தல் அலுவலர் த.பிரபுசங்கர் ஆய்வு :

திருவள்ளூர் மார்ச் 22 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான த.பிரபுசங்கர் தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். :

மக்களவைத் தேர்தல் - 2024 முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையத்தில் தொலைக்காட்சியில் வரும் ஊடகங்களில் அரசியல் கட்சி சார்ந்த விளம்பரங்களை கண்காணித்து பதிவேடுகளில் பதிவிட வேண்டும். CVigil ல் தேர்தல் தொடர்பான புகார்களை உடனடியாக பதில் அளிக்க வேண்டும். பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு வாகனங்கள் ஒரே இடத்தில் அதிக நேரம் நிற்பதே தவிர்க்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். :

மேலும் தொலைபேசி வாயிலாக தேர்தல் கட்டுப்பாட்டு மையத்திற்கு தேர்தல் தொடர்பான வரும் எவ்வித புகார்கள் ஆனாலும் உடனடியாக அவர்களுக்கு தகுந்த முறையில் பதில் தர வேண்டும் மாவட்ட தேர்தல் அலுவலர் த.பிரபுசங்கர் அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் தனித்துணை ஆட்சியர் (நிலம்) செல்வமதி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.