பொன் பாடி சோதனை சாவடியில் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்கள் பறிமுதல் ஒருவர் கைது :

பதிவு:2024-03-28 18:00:06



பொன் பாடி சோதனை சாவடியில் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்கள் பறிமுதல் ஒருவர் கைது :

பொன் பாடி சோதனை சாவடியில் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்கள் பறிமுதல் ஒருவர் கைது :

திருவள்ளூர் மார்ச் 29 : ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பேருந்துகள் மூலம் திருவள்ளூர் மாவட்டத்திற்கு கடத்தி வந்து விற்பனை செய்வதாக போலீசா ருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று 26-ஆம் தேதி திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனை சாவடியில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஞானதி மற்றும் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து நகரி, புத்துார் திருத்தணி வழியாக சென்னை கோயம்பேடு வரை செல்லும் தமிழக அரசு பேருந்து தடம் எண்:201 என்ற பேருந்தை போலீசார் சோதனை செய்தனர். அப்போது பேருந்தில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த நபரிடம் இருந்த நான்கு பைகளில் 25 பாக்கெட்டுகளில், ஹான்ஸ், குட்கா புகையிலை பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் குட்கா புகையிலைப் பொருட்களை கடத்தி வந்தவர் ஆந்திர மாநிலம், பிரகாஷம் மாவட்டத்தைச் சேர்ந்த கோபால் மகன் சேகர் (53) என தெரிய வந்தது. போலீசார் சேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.