100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து மகளிர் பங்கு பெறும் மாபெரும் இரண்டு சக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பேரணி : மாவட்ட தேர்தல் அலுவலர் த.பிரபுசங்கர் துவக்கி வைத்தார் :

பதிவு:2024-04-18 08:17:30



100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து மகளிர் பங்கு பெறும் மாபெரும் இரண்டு சக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பேரணி : மாவட்ட தேர்தல் அலுவலர் த.பிரபுசங்கர் துவக்கி வைத்தார் :

100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து மகளிர் பங்கு பெறும் மாபெரும் இரண்டு சக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பேரணி : மாவட்ட தேர்தல் அலுவலர் த.பிரபுசங்கர் துவக்கி வைத்தார் :

திருவள்ளூர் ஏப் 17 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் மாவட்டத் தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான த.பிரபுசங்கர் மக்களவைத் தேர்தல் - 2024 முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் திருவள்ளூர் நகராட்சி சார்பில் 100% வாக்களிப்பது அவசியம் குறித்து மகளிர் பங்கு பெறும் மாபெரும் இரண்டு சக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாச பெருமாள் முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மக்களவைப் பொதுத் தேர்தல்-2024 முன்னிட்டு மாவட்டம் நிர்வாகம் மற்றும் திருவள்ளுர் நகராட்சி சார்பில் மகளிர் பங்குபெறும் மாபெரும் இரண்டு சக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பேரணி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்து திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக காமராஜர் சிலை, பேருந்து நிலையம் மணவாள நகர் வழியாக ஈக்காடு பாலம் அருகில் சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்தது.

இந்த விழிப்புணர்வு பேரணியில் 500 மேற்பட்ட மகளிர் பங்கு பெற்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணியில் மகளிர்கள் பணம் வாங்காமல் நேர்மையாக வாக்களிப்போம், எனது வாக்கு எனது எதிர்காலம், வாக்களிப்பதில் பெருமை கொள்வோம், இந்திய ஜனநாயகத்தில் பங்கு பெறுவோம், எனது வாக்கு எனது உரிமை, தவறாமல் வாக்களிப்பது வாக்காளர் கடமை, நமது இலக்கு 100 % சதவீதம் வாக்குப்பதிவு , தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா, ஓட்டுக்கு வாங்க மாட்டோம் நோட்டு என்ற பதாகைகளை ஏந்தி பொது மக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலமாக சென்றனர்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.இராஜ்குமார், மகளிர் திட்ட இயக்குனர் செல்வராணி, உதவி இயக்குனர் கலால் ரங்கராஜன் மற்றும் வட்டாட்சியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.