பதிவு:2024-06-21 12:05:53
திருவள்ளூர் மாவட்ட காவல் துறை வாகன ஏல அறிவிப்பு : கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோ.அரிகுமார் தகவல் :
திருவள்ளூர் ஜூன் 21 : திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் சம்மந்தப்பட்டு பறிப்பிழப்பு செய்யப்பட்டுள்ள 182 வாகனங்களில் 165 இரு சக்கரவாகனங்கள், 17 நான்கு சக்கர வாகனங்களை அரசாணை (நிலை) எண்: 39. (உள்),மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை (VIII) துறை,நாள்: 22.10.2019 மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் உத்தரவு ந.க.எண்: 3339/2022/வி1,நாள். 29.03.2022- படியும் வருகின்ற 09.07.2024 மற்றும் 10.07.2024-ம் தேதிகளில் காலை 10 மணியளவில் திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தின் அருகே 182 வாகனங்கள் ஏலம் விடப்படஉள்ளது.
வாகனங்களை ஏலம் கேட்க வருபவர்கள்; முன் வைப்புகட்டணத் தொகையாக இரு சக்கரவாகனங்களுக்கு ரூ.1,000, மூன்று சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கரவாகனத்திற்கு ரூ.5,000 செலுத்தவேண்டும். அதற்க்கான டோக்கன் காலை 8 மணிமுதல் 10 மணி வரை வழங்கப்படும். வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலம் கேட்ட தொகையுடன் இரு சக்கரவாகனத்திற்க்கு அரசு விற்பனை வரி 12 சதவிகிதம் மூன்று மற்றும் நான்கு சக்கரவாகனத்திற்கு 18 சதவிகிதம் உடனடியாக செலுத்திவிட வேண்டும்.
வாகனத்தின் விபரம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பீட்டு தொகை திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகதகவல் அறிவிப்பு பலகையில் ஒட்டிவைக்கப்பட்டுள்ளது.வாகனத்தின் உரிமையாளர்கள் உரிமையாளருக்கான பதிவுச்சான்று,ஆதார் கார்டு கொண்டு வர வேண்டும். மற்றும் பொது ஏலத்தில் கலந்து கொள்ளவருபவர்கள் ஆதார் கார்டு, அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை தவறாமல் கொண்டு வரவேண்டும். ஏலத்தில் கலந்து கொண்டு வாகனம் எடுக்காதவர்களுக்கு முன் வைப்பு கட்டணத் தொகை ஏலத்தின் முடிவில் திருப்பித் தரப்படும் என கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோ.அரிகுமார் தெரிவித்துள்ளார்.