மேடைக்கு பதில் லாரியில் நின்று ஆர்ப்பாட்டம் செய்ய எதிர்ப்பு : கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 62 பேர் உயிரிழந்தததற்கு பொறுப்பேற்று திமுக அரசு பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி திமுக அரசைக் கண்டித்து திருவள்ளூரில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் :

பதிவு:2024-06-24 16:43:32



மேடைக்கு பதில் லாரியில் நின்று ஆர்ப்பாட்டம் செய்ய எதிர்ப்பு : கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 62 பேர் உயிரிழந்தததற்கு பொறுப்பேற்று திமுக அரசு பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி திமுக அரசைக் கண்டித்து திருவள்ளூரில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் :

மேடைக்கு பதில் லாரியில் நின்று ஆர்ப்பாட்டம் செய்ய எதிர்ப்பு : கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 62 பேர் உயிரிழந்தததற்கு பொறுப்பேற்று திமுக அரசு பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி திமுக அரசைக் கண்டித்து திருவள்ளூரில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் :

திருவள்ளூர் ஜூன் 24 : திருவள்ளூர் மருத்துவ கல்லூரி அருகே கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாஆரயம் குடித்து 62 பேர் உயிரிழந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருங்கிணைந்த அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.திமுக அரசு ஆர்ப்பாட்டத்திற்கு மேடை அமைக்க கூடாது இருக்கைகள் அமைக்க கூடாது போன்ற கட்டுப்பாடுகளை விதித்தது.

இதனை அடுத்து லாரியை கொண்டு வந்து அதில் நிர்வாகிகள் என்று ஆர்ப்பாட்டம் செய்ய அதிமுகவினர் முற்பட்டனர்.ஆனால் காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதால் காவல்துறை நற்கும் அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மருத்துவ கல்லூரி அருகே கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 62 பேர் உயிரிழந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருங்கிணைந்த அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி வி ரமணா தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பா பென்ஜமின், மாதவரம் மூர்த்தி, அப்துல் ரஹீம் ,மாவட்ட செயலாளர்கள் சிறுனியம் பலராமன், அலெக்சாண்டர், முன்னாள் எம்பிக்கள் வேணுகோபால் திருத்தணி கோ.அரி, முன்னாள் எம்எல்ஏ.க்கள் திருவொற்றியூர் குப்பன், பூந்தமல்லி மணிமாறன், விஜயகுமார், பொன்ராஜ் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு விடியா தி.மு.க அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின், ஈவு இரக்கமில்லாமல் 62 உயிர்களை கொன்று குவித்த விடியா திமுக அரசு உடனடியாக பதவி விலக வேண்டும். 62 பேர் சாவுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். விடியா ஏவல் துறை ஆர்ப்பாட்டத்தில் மேடை அமைக்கக் கூடாது, இருக்கைகள் போடக் கூடாது என கட்டுப்பாடுகள் விதித்தது கண்டனத்திற்குரியது என குற்றம் சாட்டினார்.