பதிவு:2024-07-02 10:50:58
ஆதிதிராவிடர் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் கள ஆய்வு :
திருவள்ளூர் ஜூலை 02 : திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட செவ்வாய்பேட்டை உள்ள ஆதிதிராவிடர் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் கள ஆய்வு மேற்கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்பேட்டை கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவியர்களிடையே பாட திட்டங்கள் மற்றும் கற்றல் திறன் குறித்தும், புத்தகங்கள் மற்றும் நோட்டுகள், ஆடைகள் முறையாக வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும், ஆசிரியர்களின் வருகை பதிவேடுகள், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் குறித்தும், தொடர்ந்து ஆதிதிராவிடர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆவடி அருகே மோரை கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் ஆரம்பப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிட பணிகள் மற்றும் அடிப்படை உட்பட்ட அமைப்பு வசதிகள் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் தெரிவித்தார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் செல்வராணி, தாட்கோ பொது மேலாளர் இந்திரா , தலைமையாசிரியர்கள் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.