அம்பத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடிச்சேர்க்கை : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

பதிவு:2024-07-03 11:37:54



அம்பத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடிச்சேர்க்கை : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

அம்பத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடிச்சேர்க்கை : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

திருவள்ளூர் ஜூலை 03 : அம்பத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் -2024 ஆம் ஆண்டு அனைத்து தொழிற்பிரிவுகளில் மீதமுள்ள காலி இருக்கைகளை நிரப்புவதற்கான நேரடிச்சேர்க்கை 01.07.2024 முதல் 15.07.2024 வரை நடைபெறுவதால் பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் தங்கள் சேர்க்கை விண்ணப்பங்களை அம்பத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்து விண்ணப்பித்து பயிற்சியில் சேரலாம்.

நேரில் வரும் விண்ணப்பதாரர்கள் அனைத்து அசல் சான்றிதழ்களான மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் - 5 ஆகியவற்றை எடுத்துவரவேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.