திருவள்ளூர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 522 மனுக்கள் பெறப்பட்டன :

பதிவு:2024-07-09 12:46:55



திருவள்ளூர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 522 மனுக்கள் பெறப்பட்டன :

திருவள்ளூர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 522 மனுக்கள் பெறப்பட்டன :

திருவள்ளூர் ஜூலை 09 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் பொதுபிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் 522 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதில், நிலம் சம்பந்தமாக 108 மனுக்களும் சமூக பாதுகாப்புதிட்டம் தொடர்பாக 93 மனுக்களும் வேலைவாய்ப்பு வேண்டி 117 மனுக்களும் பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 74 மனுக்களும் மற்றும் இதரதுறைகள் சார்பாக 130 மனுக்களும் என மொத்தம் 522 மனுக்கள் பெறப்பட்டன.

இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஒ.என்.சுகபுத்ரா, பொன்னேரி சார் ஆட்சியர் சங்கேத் பல்வந்த் வாஹே, உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆயுஷ் குப்தா, வருவாய் கோட்டாட்சியர் தீபா(திருத்தணி), தனித் துணை ஆட்சியர் வி.கணேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன், மாற்றுத்திறனாளி நல அலுவலர் சீனிவாசன், மற்றும் பல்வேறு துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.