திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்ட ஒழுங்கு, சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஆய்வு கூட்டம் :

பதிவு:2024-07-11 12:05:05



திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்ட ஒழுங்கு, சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஆய்வு கூட்டம் :

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்ட ஒழுங்கு, சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஆய்வு கூட்டம் :

திருவள்ளூர் ஜூலை 11 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்ட ஒழுங்கு , சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஆய்வு கூட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், போதை பொருட்கள் தடுப்பு குறித்து ஒருங்கிணைப்பு குழு ஆய்வுக் கூட்டம் காவல் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாச பெருமாள், ஆவடி துணை காவல் கண்காணிப்பாளர் ஐமன் ஜமால்,மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் போதைப் பொருட்கள் தடுப்பு ஆய்வுக் கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் காவல்துறையினர்கள் ஆய்வு மேற்கொள்ளும் பொழுது போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை கண்டறியப்பட்டால் கடையின் மீது நடவடிக்கை மேற்கொண்டு கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் நன்றாக பயன்பாட்டில் உள்ளதா என்பது குறித்தும் சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து ஆய்வுக் கூட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு உறுப்பினர்களிடம் மாவட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் குறித்து புகார் தெரிவிக்க வேண்டுமெ ன்றால் மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக தெரிவியுங்கள் அந்த புகாரின் மனுக்கள் மீது உடனடியாக துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் தொடர்ந்து சட்டஒழுங்கு பிரச்சினை தொடர்பாக மாவட்ட கண்காணிப்பாளர் ஆவடி காவல் துணை கண்காணிப்பாளர்களிடம் விவாதிக்கப்பட்டது.

இதில் பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆயுஷ் குப்தா, வருவாய் கோட்டாட்சியர்கள் கற்பகம் (திருவள்ளூர்), தீபா (திருத்தணி), மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் வெங்கட்ராமன், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.