திருவள்ளூர் மாவட்டத்தில் துணிச்சலான மற்றும் வீர சாகச செயல் புரிந்த பெண்களுக்கு “துணிவு மற்றும் வீரதீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது” : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

பதிவு:2024-07-11 12:27:01



திருவள்ளூர் மாவட்டத்தில் துணிச்சலான மற்றும் வீர சாகச செயல் புரிந்த பெண்களுக்கு “துணிவு மற்றும் வீரதீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது” : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

திருவள்ளூர் மாவட்டத்தில் துணிச்சலான மற்றும் வீர சாகச செயல் புரிந்த பெண்களுக்கு “துணிவு மற்றும் வீரதீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது” : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

திருவள்ளூர் ஜூலை 11 : சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம், நாசாவின் முதல் இந்திய பெண் விண்வெளி வீராங்கனை என்ற பெருமையை பெற்ற கல்பனா சாவ்லா அவர்களின் நினை வாக, தமிழ் நாட்டை சேர்ந்த, துணிச்சலான மற்றும் வீர சாகச செயல் புரிந்த பெண்களுக்கு “துணிவு மற்றும் வீரதீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது” வழங்கப்பட உள்ளது.

மேற்படி விருதுக்கு தேர்வு செய்யப்படும் விருதாளருக்கு விருதுக்கான பதக்கத்துடன் ரூ.5 இலட்சத்திற்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் ஆகியவை 2024 ஆம் ஆண்டு சுதந்திர விழாவின் போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட உள்ளது. மேற்படி விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தமிழக அரசின் விருதுகளுக்கான https://www.awards.tn.gov.in என்கிற இணையதள பக்கத்தில் 15.07.2024- க்குள் விண்ணப்பிக்க வேண்டும். 15.07.2024க்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

மேற்படி இணையதளத்தில் விருதுக்கு விண்ணப்பித்த நகலுடன் திருவள்ளூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு மேற்படி விருதுக்கான விண்ணப்ப படிவத்தினை பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் துணிச்சலான மற்றும் வீர சாகச செயல் புரிந்தமை குறித்த புகைப்படங்கள் மற்றும் பத்திரிக்கை செய்தி குறிப்புகளுடன் கூடிய ஆவணங்களை, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தனித் தனியாக 3 செட் Booklet தயார் செய்து 18.07.2024 அன்று மாலை 5 மணிக்குள் "மாவட்ட சமூக நல அலுவலகம், 2 வது தளம், மாவட்ட ஆட்சியரகம், திருவள்ளூர் மாவட்டம் – 602001" என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.