திருவள்ளூரில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் : பொதுமக்களிடமிருந்து 377 கோரிக்கை மனுக்களை பெறப்பட்டன :

பதிவு:2024-07-16 11:00:45



திருவள்ளூரில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் : பொதுமக்களிடமிருந்து 377 கோரிக்கை மனுக்களை பெறப்பட்டன :

திருவள்ளூரில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் : பொதுமக்களிடமிருந்து 377 கோரிக்கை மனுக்களை பெறப்பட்டன :

திருவள்ளூர் ஜூலை 16 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார் பொது மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் 377 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு மனுக்களின் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்டதுறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் பொதுபிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் 377 மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழங்கினர். இதில், நிலம் சம்பந்தமாக 125 மனுக்களும் சமூக பாதுகாப்புதிட்டம் தொடர்பாக 70 மனுக்களும் வேலைவாய்ப்பு வேண்டி 45 மனுக்களும் பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 53 மனுக்களும் மற்றும் இதரதுறைகள் சார்பாக 84 மனுக்களும் என மொத்தம் 377 மனுக்கள் பெறப்பட்டன.

இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார் அறிவுறுத்தினார்.

இதில் தனித் துணை ஆட்சியர் (சபாதி) வி.கணேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன், வருவாய் கோட்டாட்சியர் தீபா (திருத்தணி), மாற்றுத்திறனாளி நல அலுவலர் சீனிவாசன், மற்றும் பல்வேறு துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.