அம்பத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் அனைத்து தொழிற் பிரிவுகளில் நேரடிச் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

பதிவு:2024-07-19 12:37:37



அம்பத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் அனைத்து தொழிற் பிரிவுகளில் நேரடிச் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

அம்பத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் அனைத்து தொழிற் பிரிவுகளில் நேரடிச் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

திருவள்ளூர் ஜூலை 19 : அம்பத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024 ஆம் ஆண்டு அனைத்து தொழிற் பிரிவுகளில் மீதமுள்ள காலி இருக்கைகளை நிரப்புவதற்கான நேரடிச் சேர்க்கைக்கான கால அவகாசம் 16.07.2024 முதல் 31.07.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் தங்கள் சேர்க்கை விண்ணப்பங்களை அம்பத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்து விண்ணப்பித்து பயிற்சியில் சேரலாம்.

நேரில் வரும் விண்ணப்பதாரர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார்அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் - 5 ஆகியவற்றை எடுத்து வரவேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.