பதிவு:2024-07-19 12:39:00
அம்பத்தூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் (மகளிர்) சேர்க்கை : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :
திருவள்ளூர் ஜூலை 19 : அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் (மகளிர்) அம்பத்தூர், சென்னை -600050 ல் 16..07.2024 முதல் 31.07.2024 வரை நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. எட்டாம் வகுப்பு தேர்ச்சி , பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு இல்லை.
அதன்படி தையல் தொழிற்நுட்பம் - 1 வருடம், 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்,கோபா -1 வருடம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்,கட்டிடப் பட வரைவாளர் - 2 வருடம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்,Stenography (Tamil & English) 1 வருடம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இந்த தொழிற் பிரிவுகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சியில் சேருவோருக்கு மாத உதவித்தொகை ரூ.750, இலவச பஸ் பாஸ் , மிதிவண்டி , பாட புத்தகங்கள் , வரைபடக் கருவிகள், இரு செட் சீருடை , மூடு காலணி மற்றும் சிறந்த தொழிற் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்கப்படும் மற்றும் தமிழக அரசு வழங்கும் உயர்கல்வி உதவித்தொகை (6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளியில் பயின்ற) மாணவிகளுக்கு ரூ 1000 கூடுதலாக வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் மதிப்பெண் சான்றிதழ் , மாற்று சான்றிதழ் , சாதி சான்றிதழ் , ஆதார் அட்டை , வங்கி கணக்கு புத்தகம் நகல் , பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் - 5 ஆகியவற்றை எடுத்து நேரில் வர வேண்டும். சேர்க்கை கட்டணம் ரூ 235. மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் 9840756210, 9444017528. என மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் தெரிவித்தார்.