பதிவு:2024-07-23 12:23:30
திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா : முன்னாள் அமைச்சர், எம்எல்ஏ பங்கேற்பு :
திருவள்ளூர் ஜூலை 23 : திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா புல்லரம்பாக்கத்தில் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் உமா மகேஸ்வரன் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர், பூந்தமல்லி எம்எல்ஏவும், ஆதிதிராவிரடர் நலக்குழு செயலாளருமான ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். முன்னதாக டாக்டர் கலைஞர், பேரறிஞர் அண்ணா, பெரியார் ஆகியோரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து திமுக கொடியேற்றினர்.
இதில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், இயற்கை காற்றை சுவாசிக்க வேண்டும். தற்போது வாகனங்கள் அதிகரிப்பால் புகையை சுவாசிக்கும் நிலை உள்ளது. இதனால் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே மரங்களை நட்டு இயற்கை காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதற்காக டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவில் மரக்கன்றுகளை நட வேண்டும் என திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் இன்று மரக்கன்றுகள் நடும் விழா நடைபெறுகிறது.இதே போல் திருவள்ளூர் மாவட்டம் முழுழதும் இளைஞரணி சார்பில் மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகளை நட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் ரமேஷ், மாணவரணி இணை செயலாளர் ஜெரால்டு, மாணவரணி அமைப்பாளர் தியாகராஜன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் புஜ்ஜி ராமகிருஷ்ணன், ஆர்.ஜெயசீலன், பொதுக்குழு உறுப்பினர் த.எத்திராஜ், மாவட்ட கவுன்சிலர் விமல்வர்ஷன், நிர்வாகிகள் ஜெயபாலன், வெங்கல் சீனிவாசன் உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.