பதிவு:2024-07-27 12:05:00
திருவள்ளூரில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட பணிகள் குறித்து மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் :
திருவள்ளூர் ஜூலை 27 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட பணிகள் குறித்து மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் முதலமைச்சரின காலை உணவு திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சரால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. ஆகையால் காலை உணவு திட்டம் நடைபெறும் மையங்களை அனைத்து அலுவலர்களும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் காலை உணவு திட்ட செயல்பாடுகளின் குறிப்பிட்ட நேரத்திற்குள் அதற்குறிய செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.மாணவர்கள் வழங்கப்படும் உணவு பொருட்கள் தரமாகவும் உணவு அருந்துவதற்கான நேரத்தில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கூட்டுறவுத்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் காலை உணவு திட்டத்திற்க்கு வழங்கப்படும் பொருட்களை பிரதி மாதம் 28 ஆம் தேதிற்குள் காலை உணவு மையத்திற்க்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.
இதில் மகளிர் திட்ட இயக்குனர் செல்வராணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) பிரகாஷ் , மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மோகனா மற்றும் அரசு அலுவலர்களுக்கு உட்பட பலர் கலந்து கொண்டனர்.