ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணிக்கு சிறப்பு பேருந்துகள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தகவல் :

பதிவு:2024-07-27 12:15:42



ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணிக்கு சிறப்பு பேருந்துகள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தகவல் :

ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணிக்கு சிறப்பு பேருந்துகள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தகவல் :

திருவள்ளூர் ஜூலை 27 : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (வி) லிட். விழுப்புரம் கோட்டத்தின் மூலம் வருகிற 29-ஆம் தேதி ஆடி கிருத்திகையை முன்னிட்டு 27.7.2024 முதல் 29.07.2024 வரை திருத்தணிக்கு கூடுதலாக சிறப்பு பேருந்துகள் தினசரி இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி வேலூரிலிரு்து திருத்தணிக்கு 80 பேருந்துகளும், அரக்கோணத்திலிருந்து 45 பேருந்துகளும், காஞ்சிபுரத்திலிருந்து 35 பேருந்துகளும், திருப்பத்தூரிலிருந்து 35 பேருந்துகளும், குடியாத்தத்திலிருந்து 30 பேருந்துகளும், ஆரணியிலிருந்து 30 பேருந்துகளும், திருப்பதியிலிருந்து 20 பேருந்துகளும், சென்னையிலிருந்து 25 பேருந்துகளும், திருவண்ணாமலையிலிருந்து 15 பேருந்துகளும், அரக்கோணத்திலிருந்து 7 பேருந்துகளும், சென்னையிலிருந்து திருப்பதிக்கு திருத்தணி வழியாக செல்லும் (வழி ) 30 பேருந்துகளும், காஞ்சிபுரத்திலிருந்து திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள் 20 இயக்கப்படுகின்றன.

இது தவிர சித்தூர், திண்டிவனம்,விழுப்புரம், சோளிங்கர், செய்யார், வந்தவாசி,ஆம்பூர், பேர்ணாம்பட்டு,பள்ளிப்பட்டு, புத்தூர் ஆகிய ஊர்களில் இருந்தும் திருத்தணிக்கு மொத்தமாக 560 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.மேலும் பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்து தேவையெனில் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.