திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடிக்கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு வரும் 29 ம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை :

பதிவு:2024-07-27 12:17:07



திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடிக்கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு வரும் 29 ம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை :

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடிக்கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு வரும் 29 ம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை :

திருவள்ளூர் ஜூலை 27 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அமைந்துள்ள முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் 29.07.2024 அன்று (திங்கள்கிழமை) ஒருநாள் நடைபெற இருக்கும் ஆடிக்கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலவாணி முறிச்சட்டம் 1881 ன் கீழ் வராது என்பதால் இம்மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும் சார்நிலைக் கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு 29.07.2024 அன்று செயல்பட வேண்டும்.

இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் பொருட்டு 10.08.2023 (சனிக்கிழமை) அன்று பணிநாளாக அறிவிக்கப்படுகிறது.இந்த உள்ளூர் விடுமுறையானது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என மாவட்ட ஆட்சியர் த. பிரபுசங்கர் தெரிவித்தார்.