வீரராகவர் கோயில் சாலையில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கும் வகையில் இருபுறமும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் நகர்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தல் :

பதிவு:2024-07-31 12:55:31



வீரராகவர் கோயில் சாலையில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கும் வகையில் இருபுறமும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் நகர்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தல் :

வீரராகவர் கோயில் சாலையில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கும் வகையில் இருபுறமும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் நகர்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தல் :

திருவள்ளூர் ஜூலை 31 : திருவள்ளூர் நகராட்சி அலுவலக வளாக கூட்டரங்கத்தில். நகர்மன்ற குழு சாதாரண கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் தலைமை தாங்கினார். இதில், நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு, நகர்மன்ற துணைத்தலைவர் சி.சு.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் நகர்மன்ற உறுப்பினர்கள் வசந்தி வேலாயுதம், வி.சுமித்ரா வெங்கடேசன், பி.நீலாவதி பன்னீர்செல்வம், அம்பிகா ராஜசேகர் ,கே.பிரபாகரன், ஆர்.பிரபு, சாந்தி கோபி, அயூப் அலி, டி.கே.பாபு, வி.இ.ஜான், ஜி.ஆர்.ராஜ்குமார் (எ)தாமஸ், பத்மாவதி ஸ்ரீதர், அருணா ஜெய்கிருஷ்ணா, இந்திரா பரசுராமன், வி.சீனிவாசன், எ.எஸ்.ஹேமலதா, , ஆர்.விஜயகுமார், வி.எம்.கமலி, ஆனந்தி சந்திரசேகர், எல்.செந்தில்குமார், க.விஜயலட்சுமி, எஸ்.தனலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கும், வார்டு உறுப்பினர்களுக்கும் இடையே விவாதம் நடைபெற்றது. அப்போது, வீரராகவர் கோயிலில் ஒவ்வொரு அமாவசை தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால், இதுபோன்று வருவோர் வாகனங்களை சாலையில் இருபுறமும் நிறுத்துவதாலும், ஆக்கிரமித்து கடைகள் அமைந்துள்ளதாலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதை தவிர்க்க ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.கொண்டம்புரதம் தெருவில் சிறிது நேரம் மழை பெய்தாலே பாதாள சாக்கடை கழிவு நீர் மேலே வந்து விடுகிறது. அதனால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று அபாயமும் ஏற்படுகிறது.

நகராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கப்படும் ஈமச்சடங்கு நிதி கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்படாமல் உள்ளது. அதனால், விண்ணப்பித்த நபர்களுக்கு உடனே விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கவும் நகர்மன்ற வார்டு உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.இதற்கு பதில் அளித்து பேசிய நகர் மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், இந்தக் கூட்டத்தில் நகர் மன்ற வார்டு உறுப்பினர்கள் தெரிவித்த புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் நடராஜன், சுகாதார அலுவலர் கோவிந்தராஜ், நகரமைப்பு அலுவலர் விஜயா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.