பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் : திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி ராஜேந்திரன் பங்கேற்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் :

பதிவு:2024-08-05 13:03:08



பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் : திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி ராஜேந்திரன் பங்கேற்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் :

பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் : திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி ராஜேந்திரன் பங்கேற்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் :

திருவள்ளூர் ஆக 02 : திருவள்ளூர் அடுத்த பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது.பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூண்டி, நெய்வேலி, ஒதப்பை, மோவூர், ஆற்றம்பாக்கம், சோமதேவன் பட்டு, அரியத்தூர், நம்பாக்கம், வெள்ளாத்துக்கோட்டை ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற இம்முகாமிற்கு ஒன்றிய குழு துணை தலைவர் மகாலட்சுமி மோதிலால் தலைமை தாங்கினார். ஒன்றிய திமுக செயலாளர் கிறிஸ்டி (எ) அன்பரசு, பூண்டி ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா ரமேஷ், திருவாலங்காடு ஒன்றிய செயலாளர் எஸ். மகாலிங்கம், ப.சிட்டிபாபு, சுதாகர், பட்டறை பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி ராஜேந்திரன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்து, ஒரு சில பயனாளிகளுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார். மேலும் பொதுமக்களிடமிருந்தும் கோரிக்கை மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதில் துணை வட்டாட்சியர் ஆதிலட்சுமி வருவாய் ஆய்வாளர் பூண்டி விஜயலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (வட்டார ஊராட்சி) , (கிராம வ.) விஏஓக்கள் சேகர், அன்பரசன், சக்திவேல், பரத் , ஹேமாவதி, கிராம உதவியாளர்கள் சந்திரசேகர், ரஜினி, விஜயராஜ், மகேஷ்பாபு, தனலட்சுமி மற்றும் வேளாண்மை இயக்குனர் இளையராஜா வேளாண்மை அலுவலர் ராஜேஷ் உதவி வேளாண்மை அலுவலர்கள் தினேஷ்குமார் திவ்யா தவப்புதல்வன் அருள்மொழி சுனில் குமார் மற்றும் திமுக நிர்வாகிகள்வி. எஸ்.சதீஷ், எல். மோகன், எம்.கௌதம், பி.சரவணன், கிருபாகரன், ஜி. டில்லிபாபு, பி பாலசுப்பிரமணி, யுவனேஷ் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.