திருவள்ளூர் அடுத்த காவாங்கொளத்தூரில் டிவி பார்ப்பதில் சகோதரர்களுக்கு இடையே தகராறில் 9-ஆம் வகுப்பு மாணவன் தூக்கு போட்டு தற்கொலை :

பதிவு:2024-08-05 13:29:31



திருவள்ளூர் அடுத்த காவாங்கொளத்தூரில் டிவி பார்ப்பதில் சகோதரர்களுக்கு இடையே தகராறில் 9-ஆம் வகுப்பு மாணவன் தூக்கு போட்டு தற்கொலை :

திருவள்ளூர் அடுத்த காவாங்கொளத்தூரில் டிவி பார்ப்பதில் சகோதரர்களுக்கு இடையே தகராறில் 9-ஆம் வகுப்பு மாணவன் தூக்கு போட்டு தற்கொலை :

திருவள்ளூர் ஆக 05 : திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம் காவாங்கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில். இவர் கொத்தனார் ஆவார் இவருக்கு யுவன்சங்கர்( வயது16), மணிரத்தினம் (வயது 14) என்கின்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் பண்ணூரில் உள்ள தனியார் பள்ளியில் யுவன் சங்கர் பதினொன்றாம் வகுப்பும், மணிரத்தினம் ஒன்பதாம் வகுப்பும் பயின்று வருகின்றனர்.இருவரும் பள்ளியை விட்டு வீட்டிற்கு வந்தனர்.ஆனால் அவரது பெற்றோர்கள் வேலைக்கு சென்று இரவு வீட்டுக்கு கால தாமதமாக வருவது வழக்கம்.அப்போது வீட்டிலிருந்த சகோதரர்கள் இருவரும் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது இருவரும் டிவி சேனல் மாற்றுவது தொடர்பாக ஒருவருக்கு ஒருவர் தகராறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து யுவன்சங்கர் டிவி ரிமோட்டை தூக்கி வீசிவிட்டு தன் தம்பியிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.இதனால் மணிரத்தினம் மனவேதனை அடைந்தார்.அவர் வீட்டிற்கு பின்னால் இருந்த புளிய மரத்தில் கயிறால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதை கண்ட அவரது வீட்டில் உள்ளவர்கள் கதறி அழுது துடி துடித்தனர்.நடந்த சம்பவம் குறித்து கடம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த மணிரத்தினம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அவரது சாவு குறித்து மேலும் விசாரித்து வருகின்றனர்.டிவி பார்ப்பதில் சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ஒன்பதாம் வகுப்பு மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.