பதிவு:2024-08-06 12:53:20
திருவள்ளூரில் மக்களைத் தேடி மருத்துவம் நான்காம் ஆண்டு தொடக்க விழா : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் பங்கேற்பு :
திருவள்ளூர் ஆக 06 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்களைத் தேடி மருத்துவம் நான்காம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கி பேசினார்.
தமிழ்நாடு முதலமைச்சரின் கடைக்கோடி மக்களின் கதவுகளையும் தட்டிய உன்னதமான திட்டம் மக்களைத் தேடி மருத்துவம் நான்காம் ஆண்டு தொடக்க விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தினால் மக்களுக்கு சிறப்பான முறையில் சேவை புரிந்து வரும் உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்த மக்கள் தொகை 27,51,656 இந்த மக்கள் தொகையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 20,85,756 இதில் 2065600 பரிசோதனை செய்யப்பட்டது. இப்ப பரிசோதனையில் 2,44 ,522 பேருக்கு இரத்த அழுத்தமும், 1,41,861 பேருக்கு சர்க்கரை நோயும்,1,28,581 பேருக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் இருப்பது கண்டறியப்பட்டது அவர்களுக்கு சிறப்பாக சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது மேலும், இத்திட்டத்தினை சிறப்பாக வழி நடத்தி மக்களுக்கு சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து,14 வட்டாரம் மற்றும் ஆவடி மாநகராட்சியில் மக்களைத் தேடி மருத்துவத்தில் சிறப்பாக பணிபுரிந்த பெண் சுகாதார தன்னார்வலர்கள், இடைநிலை சுகாதார பணியாளர்கள், எம்.டி.எம் சுகாதார ஆய்வாளர்கள், இயன் முறை மருத்துவர்கள், மருத்துவ அலுவலர்கள் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர்கள் அனைவருக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பாராட்டு சான்றிதழும் கேடயமும் வழங்கப்பட்டது. முன்னதாக மக்களைத் தேடி மருத்துவ வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
இதில் மாவட்ட சுகாதார அலுவலர்கள் ப.பிரியாராஜ் (திருவள்ளூர்), மாவட்ட சுகாதார அலுவலர் பிரபாகரன்( பூவிருந்தவல்லி) ஆவடி மாநகர நகர் நல அலுவலர் இராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.