தமிழ்நாடு சீரமரபினர் நலவாரியம் சார்பில் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

பதிவு:2024-08-10 14:30:07



தமிழ்நாடு சீரமரபினர் நலவாரியம் சார்பில் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

தமிழ்நாடு சீரமரபினர் நலவாரியம் சார்பில் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

திருவள்ளூர் ஆக 08 : பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அமைச்சர் ராஜ கண்ணப்பன் தலைவராகவும் இராசா.அருண்மொழி துணைத்தலைவராக கொண்டு தமிழ்நாடு சீரமரபினர் நலவாரியம் சீரிய முறையில் செயல்பட்டு வருகிறது. இவ்வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினருக்கு விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ்உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை,ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை,கல்வி உதவித்தொகை,திருமண உதவித்தொகை,மகப்பேறு உதவித்தொகை, மூக்குக்கண்ணாடிசெலவுத்தொகை ஈடுசெய்தல், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நலத்திட்ட உதவிகள் பெற சீரமரபினர் இனத்தைச் சார்ந்தவர்கள், 18 வயது முதல் 60 வயதுக்கு மிகாமல் உள்ளவர்கள்,அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரியாத குடும்பத்தில் ஒருவர் (அமைப்பு சாரா தொழில், நிலமற்ற விவசாய கூலி, உடலுழைப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள) இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெறவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் ஏற்கனவே உறுப்பினராக பதிவு செய்தோர்கள் தங்கள் உறுப்பினர் பதிவினை விரைவில் புதுப்பித்துக்கொள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.