போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு பயிற்சி முகாம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார்

பதிவு:2022-05-26 13:10:00



திருவள்ளூரில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு பயிற்சி முகாம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார்

போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு பயிற்சி முகாம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார்

திருவள்ளூர் மே 26 : திருவள்ளூர் நகராட்சி, தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் மாவட்ட குழந்தைகள் நல குழுமம் சார்பாக குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் நடைபெறும் பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்து, தலைமை உரையாற்றினார்.

தமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், குழந்தைகள் பாதுகாப்பிற்காக 1098 என்ற எண்ணை அழைத்தால் உடனடியாக குழந்தைகள் பாதுகாப்பு அலகு வாயிலாக தொடர்பு கொள்வர். ஏதேனும் குறைகள் இருந்தால் தகவல் தெரிவிக்கலாம். அப்படியிருந்தும், இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு எடுத்துச் செல்ல வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது. இந்த உதவி எண்ணை குறிப்பிட்ட வயது உள்ள குழந்தைகள், மாணவர்கள், மாணவியர்களுக்கு தான் இது பயனுள்ளதாக அமையும். போக்சோ சட்டம் என்றால் என்ன. இந்த சட்டத்தின் முக்கியத்துவம் என்ன. இந்த போக்சோ சட்டம் என்பது ஒரு கடுமையான சட்டமாகும்.

இந்த சட்டத்தில் எப்படி புகார் தெரிவிக்க வேண்டும். இந்த சட்டத்தில் புகார் வந்தால் என்னென்ன நடவடிக்கைகள் காவல்துறை எடுக்க வேண்டும். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இந்த போக்சோ சட்டத்தின் அடிப்படையில் பாதகமாக ஒரு செயல் நடப்பது தெரிய வந்தால் அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் எத்தகைய நடவடிக்கைள் மேற்கொள்ள வேண்டும் என்ற சந்தேகங்கள் நம் அனைவருக்கும் இருக்கும்.

எனவே, இந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கு தான் உச்சநீதி மன்றங்கள், உயர்நீதி மன்றங்களில் பணியாற்றும் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் அவர்களைக் கொண்டு குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குறித்து தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கின்ற இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு, நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழிப்புணர்வு பயிற்சிக்கு வருகை தந்துள்ள அனைவரும் போக்சோ சட்டம் குறித்து தங்களுக்குள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்து, எவ்வகையில் சட்டத்தை கையாள வேண்டும் என்பதை முழுமையாக அறிந்து, அதன்படி, குழந்தைகளை பாதுகாக்க முழு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கூறினார்.

இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் எம்.நிஷாந்தி, உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிபு தத்தா தாஸ், குழந்தைகள் நல குழுமத்; தலைவர் மேரி ஆக்ஸிலியா, காவல் துணை கண்காணிப்பாளர் கோ.சந்திரதாசன், சுகாதாரத் துறை அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.