திருவள்ளூர் அருகே நண்பனை தாக்குவதை தடுக்கச் சென்ற பச்சையப்பன் கல்லூரி மாணவன் எதிரிகளால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலி :

பதிவு:2024-08-13 14:52:33



திருவள்ளூர் அருகே நண்பனை தாக்குவதை தடுக்கச் சென்ற பச்சையப்பன் கல்லூரி மாணவன் எதிரிகளால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலி :

திருவள்ளூர் அருகே நண்பனை தாக்குவதை தடுக்கச் சென்ற பச்சையப்பன் கல்லூரி மாணவன் எதிரிகளால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலி :

திருவள்ளூர் ஆக 13 : திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த கச்சூர் பகுதியை சேர்ந்தவர் பச்சையப்பன் கல்லூரி மாணவர் பிரேம்குமார் என்ற பிரசாந்த் (19).இவர் கடந்த 4 ந் தேதி கச்சூர் பேருந்து நிலையத்தில் அவருடைய நண்பரான ஆகாஷை அதே பகுதியைச் சேர்ந்த தீபக் தேவா இணைந்து முன் விரோத பகையால் அவரை தாக்கியுள்ளனர்.அப்போது தனது நண்பன் ஆகாஷை தாக்குவதை தடுக்கச் சென்ற அதே கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர் பிரேம் குமாரை தீபக் என்ற இளைஞர் அவரை இரும்பு ராடால் தலையில் பலமாக தாக்கியுள்ளார்.

பின்னர் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.அதைத்தொடர்ந்து பிரேம்குமார் கடந்த 6-ம் தேதி அன்று தனது நண்பர்களான சந்திரசேகர் கோதண்டன் மூவரும் திருவள்ளூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.அப்போது செங்குன்றம் வனச்சரகம் அலுவலகம் அருகே வாகனத்தில் சென்றவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர்.இந்த விபத்தில் பிரேம்குமாருக்கு தலையிலும் காயம் ஏற்பட்டும் அவருடைய நண்பர் கோதண்டனுத்துக்கு சிறிய காயங்களுடன் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருந்தார்.

அப்போது பிரேம்குமாருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு உடல்நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் பிரேம்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் உயிரிழப்புக்கு காரணம் தீபக் ,தேவா தான் காரணம் என குற்றம்சாட்டி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பிரேம் குமார் உறவினர்கள் ஊத்துக்கோட்டை திருவள்ளூர் நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் மேற்கொண்டனர்.

இதனால் ஊத்துக்கோட்டை திருவள்ளூர் நெடுஞ்சாலையில் அரை மணி நேரமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டது.அதைத்தொடர்ந்து அங்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர். இதில் தாக்குதல் நடத்திய தேவா என்பவரை பென்னலூர் பேட்டை போலீசார் கைது செய்தனர்.மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான தீபக் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். நண்பனை தடுக்கச் சென்று கல்லூரி மாணவனை எதிரிகள் தாக்கியதாலும் சாலை விபத்தில் சிக்கியதாலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி பலியானது கச்சூர் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.