திருவள்ளூரில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் 422 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன :

பதிவு:2024-08-13 14:56:43



திருவள்ளூரில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் 422 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன :

திருவள்ளூரில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் 422  கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன :

திருவள்ளூர் ஆக 13 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள்குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் பொதுபிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் 422 மனுக்களை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்களிடம் வழங்கினர்.

இதில், நிலம் சம்பந்தமாக 85 மனுக்களும் சமூக பாதுகாப்புதிட்டம் தொடர்பாக 67 மனுக்களும் வேலைவாய்ப்பு வேண்டி 56 மனுக்களும் பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 91 மனுக்களும் மற்றும் இதரதுறைகள் சார்பாக 123 மனுக்களும் என மொத்தம் 422 மனுக்கள் பெறப்பட்டன.

இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அறிவுறுத்தினார்.