பதிவு:2024-08-20 10:33:38
திருவள்ளூர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 508 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு அரசு நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வழங்கினார் :
திருவள்ளூர் ஆக 20 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் பொதுபிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் 508 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதில், நிலம் சம்பந்தமாக 163 மனுக்களும் சமூக பாதுகாப்புதிட்டம் தொடர்பாக 98 மனுக்களும் வேலைவாய்ப்பு வேண்டி 77 மனுக்களும் பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 64 மனுக்களும் மற்றும் இதரதுறைகள் சார்பாக 106 மனுக்களும் என மொத்தம் 508 மனுக்கள் பெறப்பட்டன.
இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் முன்னாள் படைவீரர் ஜெரால்டு அவர்களின் மகளின் படிப்பிற்க்கு கல்வி உதவித்தொகையாக ரூ.25,000 க்கான கசோலையினையும் தொடர்ந்து பொன்னேரி வட்டம் அவூர் கிராமத்தை சேர்ந்த சாம்ளா தையல் இயந்திரம் கேட்டு கோரிக்கை மனு அளித்தார்கள் மனு வழங்கிய சில நிமிடங்களிலேயே அவர்களின் கோரிக்கையை ஏற்று கும்மிடிப்பூண்டி சுற்றுச்சூழல் அலுவலகம் சார்பில் ரூ.20,000 மதிப்பிலான தையல் இயந்திரத்தினை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார் பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த், தனித் துணை ஆட்சியர் (சபாதி) வி.கணேசன், வருவாய் கோட்டாட்சியர்கள் கற்பகம் (திருவள்ளூர்), தீபா (திருத்தணி) மாற்றுத்திறனாளி நல அலுவலர் சீனிவாசன், மற்றும் பல்வேறு சார்ந்த உயர் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.