திருவள்ளூரில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

பதிவு:2022-05-26 13:25:00



திருவள்ளூரில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருவள்ளூரில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் மே 26 : தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பாக தஞ்சையில் நடைபெற்ற உயர்மட்ட குழுவால் எடுக்கப்பட்ட முடிவின்படி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் கிரிதரன் தலைமை தாங்கினார். இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கூட்டுறவு தணிக்கை துறை மாநில செயலாளர் கணேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் ஆர்ப்பாட்டத்தில் 2003 முதல் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும்,நிறுத்தி வைக்கபப்ட்டுள்ள அகவிலைப்படியை உடனே அறிவிக்க வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்ட ஒப்படைப்பு விடுப்பு பெறும் உரிமையை மீண்டும் வழங்கிட வேண்டும் என்ற 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி உடனடி தீர்வு காண வேண்டும். இல்லையேல் மிகப் பெரிய போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் எச்சரித்தனர். இதில் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகிகள் கோவிந்தராஜ், குளோத்துங்கன்,ஓட்டுநர் சங்கம் மாவட்ட தலைவர் முருகன்,துணை வட்டாட்சியர் சோமசுந்தரம்,வெளியூர் வருவாய் ஆய்வாளர் தினேஷ் உள்ளிட்ட மாவட்ட மற்றும் வட்டக் கிளை நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.