காக்களூரில் ஆவின் பண்ணையில் பணியின் போது இயந்திரத்தில் சிக்கி பெண்ணின் தலை, உடல் துண்டாகி பலி : துணை மேலாளர் சஸ்பென்ட்: ஒப்பந்த மேற்பார்வையாளர் கைது; ஐந்து பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை :

பதிவு:2024-08-22 15:27:27



காக்களூரில் ஆவின் பண்ணையில் பணியின் போது இயந்திரத்தில் சிக்கி பெண்ணின் தலை, உடல் துண்டாகி பலி : துணை மேலாளர் சஸ்பென்ட்: ஒப்பந்த மேற்பார்வையாளர் கைது; ஐந்து பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை :

காக்களூரில் ஆவின் பண்ணையில் பணியின் போது இயந்திரத்தில் சிக்கி பெண்ணின் தலை, உடல் துண்டாகி பலி : துணை மேலாளர் சஸ்பென்ட்: ஒப்பந்த மேற்பார்வையாளர் கைது; ஐந்து பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை :

திருவள்ளூர் ஆக 22 : திருவள்ளூர் அடுத்த காக்களூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் இருந்து நாள் ஒன்றுக்கு 90 ஆயிரம் லிட்டர் அளவுக்கு பால் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக காஞ்சிபுரம் செங்கல்பட்டு , மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் 20-ஆம் தேதி இரவு வழக்கம்போல் பால் உற்பத்தி செய்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வந்தது. அப்போது பால் உற்பத்தியாகி பாக்கெட் செய்து வெளியே வரும்போது அதனை டப்பில் அடுக்கி அனுப்பும் பணியில் ஒப்பந்த ஊழியர் உமா மகேஸ்வரி (30) என்பவர் வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது அவரது துப்பட்டாவும் தொடர்ந்து அவரது தலை முடியும் இயந்திரம் அருகில் உள்ள மோட்டாரின் கன்வேயர் பெல்ட்டில் சிக்கியது.இதனால் உமா மகேஸ்வரியின் தலை துண்டாகி மெஷினிலும் உடல் கீழே தரையில் விழுந்து இரத்த வெள்ளத்தில் பலியானார். இதனால் உடன் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் அலறி துடித்தனர்.இது குறித்து தகவல் அறிந்து டிஎஸ்பி கந்தன், தாலுகா இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஒப்பந்த ஊழியர் உமா மகேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் உமா மகேஸ்வரி சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் அவரது கணவர் கார்த்தி இருங்காட்டுக் கோட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருவதும், இவர்களுக்கு இரண்டு மகன் ஒரு மகள் இருப்பதும் தெரியவந்தது .மேலும் காக்களூர் பைபாஸ் சாலையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு வாடகைக்கு எடுத்து உமா மகேஸ்வரி ஆவின் பால் பண்ணைக்கு கடந்த ஆறு மாதமாக வேலைக்கு வந்ததும் தெரியவந்தது.

இந்நிலையில் ஒப்பந்த ஊழியர் உமா மகேஸ்வரியின் உயிரிழப்பு தொடர்பாக நேற்று இரவு பணியில் இருந்த துணை மேலாளர் அஜித்குமார் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. மேலும் ஒப்பந்த மேற்பார்வையாளர் வருண் குமாரை போலீசார் கைது செய்தனர்.மேலும் முதுநிலை தொழிற்சாலை உதவியாளர்கள் விக்னேஷ், கமல் சிங், அருண்குமார், சுரேஷ், மேலாளர் பொறியியல் பிரிவு அகிலேஷ் ராஜா ஆகியோர் மீது ஆவின் நிர்வாக இயக்குனர் வினித் உத்தரவின் பேரில் பொது மேலாளர் ஆர்.ராஜேஷ் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டுள்ளார்.