திருவள்ளூர் அருகே வீட்டு உபயோக பொருட்களை ஏற்றிச் சென்ற கன்டெய்னர் லாரியில் தீ விபத்து : ஒரு கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

பதிவு:2022-05-26 13:27:37



திருவள்ளூர் அருகே வீட்டு உபயோக பொருட்களை ஏற்றிச் சென்ற கன்டெய்னர் லாரியில் தீ விபத்து : ஒரு கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

திருவள்ளூர் அருகே வீட்டு உபயோக பொருட்களை ஏற்றிச் சென்ற கன்டெய்னர் லாரியில் தீ விபத்து : ஒரு கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

திருவள்ளூர் மே 26 : திருவள்ளூர் அருகே போளிவாக்கம் பகுதியில் தனியார் ஆன்லைன் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் ஆர்டர் செய்த சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான டிவி ஃப்ரிட்ஜ் வாஷிங் மெஷின். ஏசி, மிக்ஸி கிரைண்டர் உள்ளிட்ட அனைத்து வீட்டு உபயோக பொருட்கள் கண்டெய்னர் லாரியில் ஏற்றப்பட்டு சாலை மார்க்கமாக போளிவாக்கத்திலிரந்து டெல்லிக்கு புறப்பட்டது.

அதிகாலை மணவாளநகர் அடுத்த வெங்கத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கண்டெய்னரில் இருந்து புகை மூட்டம் கிளம்பியுள்ளது அதிர்ந்துபோன லாரி டிரைவர் வாகனத்தை நிறுத்திவிட்டு காவல்துறைக்கும் தங்களது நிறுவனத்திற்கும் தகவல் தெரிவித்ததையடுத்து விரைந்து வந்த மணவாளநகர் காவல் துறையினர் லாரியை திறந்து பார்த்தபோது உள்ளே தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் மளமளவென கண்டெய்னர் முழுவதும் தீ பற்றியதால் திருவூர் மற்றும் திருவள்ளூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர் இதில் கண்டெய்னர் லாரியில் இருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் முழுவதுமாக தீயில் எரிந்து நாசமானது.சம்பவ இடத்தில் திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன் மற்றும் திருவள்ளூர் தாலுகா ஆய்வாளர் ஆய்வு செய்து வருகின்றனர். ஆன்லைனில் ஆர்டர் செய்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள் கொண்டு செல்லும் கண்டெய்னர் லாரியில் ஏற்பட்ட தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது தீப்பற்றியதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.