பதிவு:2024-08-22 15:40:39
திருவள்ளூர் மாவட்டத்தில் முதிர்வுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :
திருவள்ளூர் ஆக 22 : சமூக நலத்துறையின் முலம் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து, தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்திடம் வைப்புத் தொகை ரசீதுகள் பெற்று 18 வயது நிரம்பிய நிலையில் உள்ள பயனாளிகள் முதிர்வுத் தொகை பெறுவதற்கு தங்களைச் சார்ந்த வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் சமூக நல அலுவலர்களிடம் தகுந்த ஆவணங்களை அளித்து இத்திட்டத்தின் பணப் பயன்களை பெறலாம்.
அதன்படி முதிர்வுத் தொகை பெறுவதற்கு சேமிப்பு பத்திரத்தின் அசல் மற்றும் நகல்,பத்தாம் வகுப்பு படித்ததற்கான மதிப்பெண் பட்டியல்,பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் (தாய், மகள்) கையொப்பத்துடன், ஒரு ரூபாய்க்கான அஞ்சல் வில்லை, வங்கி கணக்கு எண் விவரம் (Passbook முதல் பக்க நகல்) ஆகிய ஆவணங்களை அளிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 2 வது தளம், திருவள்ளூர் மாவட்டம். தொலைபேசி எண் : 044-29896049 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.