பட்டாபிராமில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் விற்பனைமற்றும் கண்காட்சி : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

பதிவு:2024-08-27 15:22:04



பட்டாபிராமில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் விற்பனைமற்றும் கண்காட்சி : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

பட்டாபிராமில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் விற்பனைமற்றும் கண்காட்சி : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

திருவள்ளூர் ஆக 27 : தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்குலூ உற்பத்தி செய்யும் பொருட்களை பல்வேறு வகையான கண்காட்சிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் பொருளாதார மேம்பாடு அடைய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடையே மகளிர் சுய உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்வதின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் இளம் தலை முறைகளிடையே ஒரு விழுப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களை 29.08.2024 முதல் 31.08.2024 ஆகிய 3 நாட்கள் தர்ம மூர்த்தி ராவ் பகதூர் கலவள கண்ணன் செட்டி இந்துகல்லூரி, பட்டாபிராமில் விற்பனை மற்றும் கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இக் கண்காட்சியில் திருவள்ளூர் மாவட்டம் மற்றும் இதர மாவட்டதைத்தை சார்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களான கைவினைப் பொருட்கள், கைத்தறி பொருட்கள், உணவுப் பொருட்கள், பாரம்பரிய அரிசிகள், சிறுதானிய மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டு பொருட்கள், பனைஓலை பொருட்கள் போன்ற பொருட்களுடன் 29.08.2024 அன்று காலை 8.00 மணிக்குள் கல்லூரி சந்தையில் பங்கேற்று பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 044-27664528 மற்றும் 9787368726 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.