சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் 50% அரசு மானியத்துடன்அமைக்கும் திட்டம் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

பதிவு:2024-08-27 15:23:33



சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் 50% அரசு மானியத்துடன்அமைக்கும் திட்டம் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் 50% அரசு மானியத்துடன்அமைக்கும் திட்டம் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

திருவள்ளூர் ஆக 27 : தமிழ்நாட்டில் உள்ள ஜவுளி மையங்களில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கும் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்க முன்வரும் தொழில்முனைவோர்களுக்கு 2 கோடியே 50 லட்சம் ரூபாய் வரை நிதி உதவி தமிழக அரசால் வழங்கப்படும்.

இவ்வாறு அமையவுள்ள ஜவுளிப் பூங்கா குறைந்தபட்சம் 3 தொழிற் கூடங்களுடன் குறைந்த பட்சமாக 2 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட வேண்டும்.இத்தகைய சிறிய ஜவுளிப் பூங்காவின் (Mini Textile Park) அமைப்புபின் வரும் உட்பிரிவுகளைக் கொண்டதாக இருக்கும்.

நிலம்,உட்கட்டமைப்பு வசதிகள் (சாலைவசதி, சுற்றுசுவர், கழிவுநீர் வாய்க்கால் அமைத்தல், நீர் விநியோகம், தெருவிளக்கு அமைத்தல், மின்சார வசதி (including captive power plant) மற்றும் கழிவுநீரை சுத்திகரிக்கும் நிலையம், தொலை தொடர்பு வசதி போன்றவைகள்).ஆய்வுக் கூடம், வடிவமைப்பு மையம், பயிற்சி மையம், வியாபார மையம், கிடங்கு வசதி, மூலப் பொருட்கள் மையம், குழந்தைகள் காப்பகம், உணவகம், பணியாளர்கள் விடுதி, அலுவலகம் மற்றும் இதர இனங்கள்.உற்பத்தி தொடர்பான தொழிற் கூடங்கள்.இயந்திரங்கள் மற்றும் தள வாடங்கள்.

எனவே, இம்மூன்று இனங்கள் மட்டுமே அரசின் மானியத்தை பெறத் தகுதியான முதலீடாகக் கருதப்படும்.மேற்படி திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மேலும், தகவல்களுக்கு மண்டல துணை இயக்குநர், துணிநூல் துறை, சேலம் மற்றும் 1A-2/1,சங்ககிரிமெயின்ரோடு,குகை, சேலம்- 636 006.தொலைபேசி எண். 0427- 2913006,இணையதளமுகவரி: ddtextilessalemregional@gmail.com அலுவலகத்தை அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.