பதிவு:2024-08-29 12:43:25
அலமாதி ஊராட்சி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் பண்ணை குட்டை பணிகள் : மாவட்ட ஆட்சியர் த. பிரபுசங்கர் பார்வையிட்டார் :
திருவள்ளூர் ஆக 29 : திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அலமாதி ஊராட்சி பகுதியில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் பண்ணை குட்டை பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் த. பிரபுசங்கர் பார்வையிட்டு பேசினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 126 பண்ணை குட்டை பணிகளும், கும்மிடிபூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் 152 பண்ணை குட்டை பணிகளும், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 61 பண்ணை குட்டை பணிகளும், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் 152 பண்ணை குட்டை பணிகளும், பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் 36 பண்ணை குட்டை பணிகளும், பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் 12 பண்ணை குட்டை பணிகளும், பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் 99 பண்ணை குட்டை பணிகளும், ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 78 பண்ணை குட்டை பணிகளும், சோழபவரம் ஊராட்சி ஒன்றியத்தில் 80 பண்ணை குட்டை பணிகளும், திருத்தணி ஊராட்சி ஒன்றியத்தில் 86 பண்ணை குட்டை பணிகளும்.
திருவலங்காடு ஊராட்சி ஒன்றியத்தில் 52 பண்ணை குட்டை பணிகளும், திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்தில் 41 பண்ணை குட்டை பணிகளும், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் 8 பண்ணை குட்டை பணிகளும், ஆக மொத்தம் திருவள்ளூர் மாவட்டத்தில் 934 பண்ணை குட்டைப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பண்ணை குட்டை அமைப்பதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும், மழைக்காலங்களில் பண்ணை குட்டைகள் மூலம் சேமிக்கப்பட்ட நீர் கோடை காலங்களில் பற்றாக்குறை தீர்க்கும். மேலும் பண்ணை குட்டை மீன் குஞ்சுகளை வளர்த்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் த. பிரபுசங்கர் தெரிவித்தார்.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வை. ஜெயக்குமார், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பரணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாணிக்கம், சாந்தினி மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.