திருவள்ளூர் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் 5 பயனாளிகளுக்கு ரூ.50.01 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வை.ஜெயக்குமார் வழங்கினார் :

பதிவு:2024-09-17 12:08:18



திருவள்ளூர் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் 5 பயனாளிகளுக்கு ரூ.50.01 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வை.ஜெயக்குமார் வழங்கினார் :

திருவள்ளூர் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் 5 பயனாளிகளுக்கு ரூ.50.01 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வை.ஜெயக்குமார் வழங்கினார் :

திருவள்ளூர் செப் 17 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வை.ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் பொதுபிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் 252 மனுக்களை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரிடம் வழங்கினர். இதில், நிலம் சம்பந்தமாக 70 மனுக்களும் சமூக பாதுகாப்புதிட்டம் தொடர்பாக 42 மனுக்களும் வேலைவாய்ப்பு வேண்டி 25 மனுக்களும் பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 53 மனுக்களும் மற்றும் இதரதுறைகள் சார்பாக 62 மனுக்களும் என மொத்தம் 252 மனுக்கள் பெறப்பட்டன.

இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அறிவுறுத்தினார்.தொடர்ந்து தட்கோ திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய விவசாயி நிலம் வாங்கும் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.50,01,200 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வை.ஜெயக்குமார் வழங்கினார்கள்

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சத்யபிரசாத், வருவாய் கோட்டாட்சியர் கற்பகம் திருவள்ளூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் தனலட்சுமி மாவட்ட ஆதிதிராவிடர் நல துறை அலுவலர் செல்வராணி, தட்கோ மாவட்ட மேலாளர் ர. சரண்யா , தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியம் மாநில துணை தலைவர் செ.கனிமொழி பத்மநாபன், மற்றும் பல்வேறு சார்ந்த உயர் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.