பதிவு:2024-10-03 12:08:27
திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோகளுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு :
திருவள்ளூர் அக் 02 : 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோயில் விளங்கி வருகிறது. இக்கோயிலுக்கு அமாவாசை நாட்களில் பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்வதும் கோயில் குளக்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவதும் வழக்கம். அதிலும் குறிப்பாக மற்ற மாதங்களில் நடைபெறும் அமாவாசை தினங்களில் வராவிட்டாலும் புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசைக்கு வீரராகவரை தரிசித்து விட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்கள் தங்களை வாழ்த்துவார்கள் என்பது ஐதீகம்.
அதன்படி மஹாளய அமாவாசை தினமான இன்று திருவள்ளூர் மட்டுமல்லாது வேலூர், ராணிப்பேட்டை,காஞ்சிபுரம், சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் நோய் தீர்க்க வல்லவர் என்பதால் நோய்தீர வேண்டியவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற கோயில் குளத்தில் வெள்ளம், பால் ஆகியவற்றை கரைத்து வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர்.