திருவள்ளூரில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு 9-ஆம் தேதி துவக்கம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

பதிவு:2024-10-04 14:27:57



திருவள்ளூரில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு 9-ஆம் தேதி துவக்கம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

திருவள்ளூரில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு 9-ஆம் தேதி துவக்கம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

திருவள்ளூர் அக் 04 : வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் 38 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக TNPSC, TNUSRB மற்றும் TRB போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இப்பயிற்சி வகுப்புகளின் மூலம், பயிற்சி பெற்ற மாணவ,மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பல்வேறு அரசு வேலைவாய்ப்பினைப் பெற்றுள்ளனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள TNPSC Group-II தேர்விற்கு 507 காலிப்பணியிடங்களும் Group-IIA தேர்விற்கு 1820 காலிப்பணியிடங்களும் ஆக மொத்தம் 2327 காலிப்பணியிடங்களும் வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கான முதல்நிலைத தேர்வு 14.09.2024 அன்று நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் TNPSC Group-II / IIA முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு 09.10.2024 அன்று காலை 10.30 மணிக்கு திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் துவக்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்புக்கு சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு நடத்தப்படுவதுடன் இலவச மாதிரி தேர்வுகளும் மாநில அளவிலான முழுமாதிரி தேர்வுகளும் நடத்தப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு 9789714244, 8270865957 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த TNPSC Group-II / IIA முதல்நிலை தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு விண்ணப்பம் செய்த நகலுடன் இரு பாஸ்போர்ட் சைஸ் அளவுள்ள புகைப்படம் இணைத்து திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வருகைபுரிந்து பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயனடையுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.