பதிவு:2024-10-17 10:40:00
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தளவாடங்கள், கிடங்கு மேலாண்மை, கிடங்குபிக்கர் மற்றும் பேக்கர் பயிற்சிகள் பெற விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :
திருவள்ளூர் அக் 16 : தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு, தளவாடங்கள் மற்றும் விநியோக சங்கிலிதுறை மூலம் கிடங்கு மேலாண்மை கிடங்குபிக்கர் மற்றும் பேக்கர் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. பயிற்சிகள் பெற விண்ணப்பிக்கலாம்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு பல்வேறுதிறன் அடிப்படையிலான தொழில் பயிற்சி திட்டங்களை தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும்மேம் பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தளவாடங்கள் மற்றும் விநியோக சங்கிலிதுறை மூலம் கிடங்கு மேலாண்மை, கிடங்கு பிக்கர் மற்றும் பேக்கர் பயிற்சிகள்அளிக்கப்பட உள்ளது.
கிடங்குமேலாண்மை பயிற்சிக்கு டிப்ளமோ, மற்றும் ஏதேனும் பட்டப்படிப்பில் தேர்ச்சியும், கிடங்கு பிக்கர் மற்றும் பேக்கர் பயிற்சிக்கு 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு, தொழிற் பயிற்சியில் ஐ.டி.ஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். குடும்பவருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
இப்பயிற்சி முடித்த உடன்பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலம் வேலை வாய்ப்பு ஏற்படுத்திதரப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com மூலம் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.