திருவள்ளூர் அருகே குடிபோதையில் சகதியில் தவறி விழுந்தவர் பலி : திருவள்ளூர் டவுன் போலீசார் விசாரணை :

பதிவு:2024-10-28 12:29:01



திருவள்ளூர் அருகே குடிபோதையில் சகதியில் தவறி விழுந்தவர் பலி : திருவள்ளூர் டவுன் போலீசார் விசாரணை :

திருவள்ளூர் அருகே குடிபோதையில் சகதியில் தவறி விழுந்தவர் பலி : திருவள்ளூர் டவுன் போலீசார் விசாரணை :

திருவள்ளூர் அக் 28 : திருவள்ளூர் அடுத்த சின்ன ஈக்காடு பகுதியை சேர்ந்தவர் புஷ்பராஜ் மகன் ரூபன் (48).கொத்தனார் வேலை செய்து வந்த இவரது மனைவி பானு. இவர்களுக்கு சினேகா (19), தேவி (18), மற்றும் பூஜா (16) என மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று 25 ஆம் தேதி வழக்கம்போல் பட்டாபிராம் என்ற பகுதிக்கு கொத்தனார் வேலைக்கு சென்றவர் இரவு வீடு திரும்பி உள்ளார்.

அப்போது பழைய பெட்ரோல் பங்க் அருகே நடந்து வந்து கொண்டிருந்த போது அங்குள்ள சகதியில் தவறி கீழே விழுந்துள்ளார். இரவு நேரம் என்பதால் இவர் விழுந்து கிடப்பதை யாரும் பார்க்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில் அவ்வழியாக சென்றவர்கள் சேற்றில் தவறி கீழே விழுந்து ஒருவர் இறந்து கிடப்பதாக திருவள்ளூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சிவனேசன் காவலர் செங்குட்டுவன் ஆகியோர் நேரில் சென்று சகதியில் இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இறந்து கிடந்தது கொத்தனார் ரூபன் என்பதும், ரூபனுக்கு குடிப்பழக்கமும் வலிப்பு நோய் இருப்பதாக அவரது மனைவி பானு தெரிவித்தார். எனவே நேற்று கொத்தனார் வேலைக்கு சென்றவர் குடிபோதையில் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.இது குறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.