வெங்கத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த பாமகவைச் சேர்ந்த சுனிதா பாலயோகியை பதவி நீக்கம் : பதவி நீக்கம் செல்லாது என உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் உறுதி செய்ததால் மீண்டும் பதவி வழங்க கோரிக்கை :

பதிவு:2024-11-22 15:23:09



வெங்கத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த பாமகவைச் சேர்ந்த சுனிதா பாலயோகியை பதவி நீக்கம் : பதவி நீக்கம் செல்லாது என உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் உறுதி செய்ததால் மீண்டும் பதவி வழங்க கோரிக்கை :

வெங்கத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த பாமகவைச் சேர்ந்த சுனிதா பாலயோகியை பதவி நீக்கம் : பதவி நீக்கம் செல்லாது என உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் உறுதி செய்ததால் மீண்டும் பதவி வழங்க கோரிக்கை :

திருவள்ளூர் நவ 22 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் வெங்கத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து பாமகவை சேர்ந்த சுனிதா பால யோகி கடந்த 2024 ஜனவரி மாதம் பதவி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் உத்தரவிட்டார். இதனையடுத்து துணைத் தலைவராக இருந்த மோகனசுந்தரம் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் சுனிதா பாலயோகியை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று தீர்ப்பு வெளியான நிலையில் அதன் நகலை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரிடம் பாட்டாளி மக்கள் கட்சி மேற்கு மாவட்ட செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான இ.தினேஷ் குமார் மற்றும் பாமக ஒன்றிய கவுன்சிலர் யோகானந்தன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்து ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

வருகிற ஜனவரி மாதம் ஊராட்சி மன்ற தலைவருக்கான பதவி காலம் முடிய உள்ள நிலையில் அது வரை தலைவராக பணியாற்ற அனுமதிக்க பரிசீலனை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.