பதிவு:2024-11-23 15:55:52
வெங்கத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராக நீதிமன்ற உத்தரவின் பேரில் மீண்டும் பதவியேற்றார் சுனிதா பாலயோகி :
திருவள்ளூர் நவ 23 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் வெங்கத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து பாமகவை சேர்ந்த சுனிதா பாலயோகி கடந்த 2024 ஜனவரி மாதம் பதவி நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் த.பிரபு சங்கர் உத்தரவிட்டார். இதனையடுத்து துணைத் தலைவராக இருந்த மோகனசுந்தரம் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் சுனிதா பாலயோகியை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று தற்போது தீர்ப்பு வெளியான நிலையில் அதன் நகலை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரிடம் நேற்று வழங்கி, பதவி ஏற்க அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து வெங்கத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராக சுனிதா பாலயோகியை கலெக்டர் த.பிரபுசங்கர் உத்தரவின் பேரில் இன்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மணி சேகர் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் இ.தினேஷ்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் நா. வெங்கடேசன், பா.யோகானந்தன் உட்பட வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.