பதிவு:2024-11-29 11:51:41
ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :
திருவள்ளூர் நவ 29 : திருவள்ளூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலக் குழு புதிதாக அமைக்க வேண்டி உள்ளதால் உறுப்பினர் தேர்வு செய்யும் பொருட்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட விருப்பமுள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் தங்களது சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் 25.12.2024 க்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ மனு அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.