திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 165 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன :

பதிவு:2024-12-04 11:39:14



திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 165 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன :

திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 165 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன :

திருவள்ளூர் டிச 03 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள், தங்கள் குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் 165 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதில், நிலம் சம்பந்தமான 68 மனுக்களும் சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 16 மனுக்களும் வேலைவாய்ப்பு வேண்டி 9 மனுக்களும் பசுமை வீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 45 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சார்பாக 27 மனுக்களும் என மொத்தம் 165 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார், பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர்கள் வெங்கட்ராமன்(பொது),சத்தியபிரசாத் (தேர்தல்) தனித்துணை ஆட்சியர் (சபாதி) கணேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன், வருவாய் கோட்டாட்சியர்கள் ஆ.கற்பகம், (திருவள்ளூர்) க.தீபா (திருத்தணி), தனித்துணை ஆட்சியர் (நிலம்) செல்வராணி, மற்றும் அனைத்து துறை சார்ந்த உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.