திருவள்ளூர் மாவட்டத்தில் ஆட்சிமொழிச் சட்ட வார விழா : மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தகவல் :

பதிவு:2024-12-04 12:05:14



திருவள்ளூர் மாவட்டத்தில் ஆட்சிமொழிச் சட்ட வார விழா : மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தகவல் :

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆட்சிமொழிச் சட்ட வார விழா : மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தகவல் :

திருவள்ளூர் டிச 04 : தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956 ஆம் நாளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஆட்சிமொழிச் சட்ட வாரமாகக் கொண்டாடுதல் வேண்டும் என்று அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் திருவள்ளூர் மாவட்டத்தில் 18.12.2024 முதல் 27.12.2024 வரை ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப்பட உள்ளது.

ஆட்சிமொழிச் சட்ட வார விழா கொண்டாட்டங்களின் நிகழ்வுகளாக கணினித்தமிழ் கருத்தரங்கம், ஆட்சிமொழி மின் காட்சியுரை, தமிழில் குறிப்புகள், வரைவுகள் எழுதுவதற்கான பயிற்சி, வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப் பலகைகள் அமைத்திடுவதற்கு வலியுறுத்தி வணிகச் சங்கத் தலைவர்கள், வணிக நிறுவன உரிமையாளர்களுடன் கூட்டம், பட்டிமன்றம், ஆட்சிமொழித் திட்ட விளக்க கூட்டம், மாவட்ட ஆட்சியர் தலைமையிலான விழிப்புணர்வு பேரணி ஆகியவை நடைபெற உள்ளன.

தமிழ்நாடு அரசு, வாரியங்கள், கழகங்கள், அரசு உதவி பெறும் அமைப்புகள், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், பள்ளி,கல்லூரி மாணவர்கள், தமிழமைப்புகள், தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள், வணிகர்கள், வணிகர் சங்கங்கள், பொதுமக்கள் அனைவரும் ஆட்சிமொழிச் சட்ட வார விழா நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தெரிவித்தார்.