பதிவு:2024-12-28 17:39:12
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் :
திருவள்ளூர் டிச 28 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தாங்கினார்.
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2016-17 ம் ஆண்டு முதல் 2023-24 ம் ஆண்டு வரை ரூ. 378.08 கோடி பயிர் இழப்பீடு தொகை 1,76,273 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2023-24ம் ஆண்டு சம்பா நெற்பயிருக்கு 12787 விவசாயிகளுக்கு ரூ.14.72 கோடி இழப்பீட்டுத் தொகையும் ராபி பயிர்களுக்கு 140 விவசாயிகளுக்கு 0.27 கோடி இழப்பீட்டுத் தொகையும் விடுவிக்கப்பட்டுள்ளது
2024-25 ம் ஆண்டு காரிப் பயிர்களுக்கு 1020 விவசாயிகள் 1333 எக்டர் பரப்பளவில் பயிர் காப்பீடு செய்துள்ளனர். சம்பா சிறப்பு பருவ நெற்பயிருக்கு 20731 விவசாயிகள் 23289.35 எக்டர் நெற்பயிருக்கு பயிர் காப்பீடு செய்துள்ளார். பி.எம்.கிசான் திட்டத்தன் கீழ் தகுதியுள்ள விவசாயிகள் தொடர்ந்து பயன் பெறுவதற்கு நில விவரங்கள் ஆதார் எண், eKYC, வங்கி கணக்கு எண் மற்றும் தொலைபேசி எண் ஆகியவை பி.எம்.கிசான் இணையதளத்தில் உறுதி செய்ய வேண்டும்.
பி.எம்.கிசான் திட்டத்தில் பதிவு செய்யாமல் விடுபட்ட விவசாயிகள் மற்றும் கிசான் கடன் அட்டை பெறாத விவசாயிகள் ஆகியோர் உரிய ஆவணங்களுடன் தங்கள் கிராம அளவிலான செயல் அலுவலர்களை அணுகி பி.எம்.கிசான் இணையதளத்தில் (https://pmkisan.gov.in) பதிவு செய்யும் முறையை கேட்டறிந்து உடனடியாக பதிவு செய்யவும், கிசான் கடன் அட்டை பெற விண்ணப்பித்தும் eKYC புதுப்பித்தும் பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.
புதியதாக பதிவு செய்த 286 விவசாயிகளின் பட்டியல் மூன்று கட்ட களஆய்விற்கு அனைத்து வட்டாரங்களுக்கும் அனுப்பப்பட்டு, விவசாயிகளின் தகுதி தன்மை குறித்த கள ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது.வேளாண் அறிவியல் மையம். திருவள்ளூர் மூலம் பயறு வகைகளில் - பயிர் உற்பத்தி மற்றும் பயிர் மேலாண்மை தொழில்நுட்பம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் 180க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார், உதவி ஆட்சியர் பயிற்சி ஆயுஷ் குப்தா, வேளாண்மை இணை இயக்குநர் த.கலாதேவி, இணை பதிவாளர் கூட்டுறவுத்துறை தி.சண்முகவள்ளி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மோகன், மற்றும் பல்வேறு துறைகளின் மாவட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.