திருவள்ளூர் மாவட்டத்தில் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மேல்முறையீட்டு 30 மனுக்களின் வழக்குகளை தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் எம்.செல்வராஜ் நேரடியாக விசாரணை :

பதிவு:2024-12-28 17:41:10



திருவள்ளூர் மாவட்டத்தில் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மேல்முறையீட்டு 30 மனுக்களின் வழக்குகளை தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் எம்.செல்வராஜ் நேரடியாக விசாரணை :

திருவள்ளூர் மாவட்டத்தில் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மேல்முறையீட்டு 30 மனுக்களின் வழக்குகளை தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் எம்.செல்வராஜ் நேரடியாக விசாரணை :

திருவள்ளூர் டிச 28 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் எம்.செல்வராஜ் திருவள்ளூர் மாவட்டத்தில் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மேல்முறையீட்டு நீண்ட நாள் நிலுவையிலுள்ள 30 மனுக்களின் வழக்குகளை நேரடியாக விசாரணை மேற்கொண்டார்.

தொடர்ந்து, தகவல் அறியும் உரிமைச் சட்டம் சம்மந்தமான விழிப்புணர்வு முகாமில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது தகவல் அலுவலர்களுக்கு தங்கள் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பதிவேடுகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.

இதில் தமிழ்நாடு தகவல் ஆணையம் பிரிவு அலுவலர் மனோகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன், தனித்துணை ஆட்சியர் (சபாதி) கணேசன் , மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.