திருவள்ளூர் மாவட்ட பிரிவின் சார்பாக பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு வரும் 4 ம் தேதி மிதிவண்டி போட்டிகள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

பதிவு:2024-12-28 17:42:52



திருவள்ளூர் மாவட்ட பிரிவின் சார்பாக பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு வரும் 4 ம் தேதி மிதிவண்டி போட்டிகள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

திருவள்ளூர் மாவட்ட பிரிவின் சார்பாக பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு வரும் 4 ம் தேதி மிதிவண்டி போட்டிகள் : மாவட்ட ஆட்சியர்  த.பிரபுசங்கர் தகவல் :

திருவள்ளூர் டிச 28 : தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருவள்ளூர் மாவட்ட பிரிவின் சார்பாக பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 04.01.2025 அன்று காலை 6 மணிக்கு திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்கும் தனித்தனியாக மிதிவண்டி போட்டிகள் நடைபெறவுள்ளன.

மேலும் இதில் 13 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 15.கி.மீ தூரமும் மாணவியர்களுக்கு 10.கி.மீ தூரமும் மற்றும் 15 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 20.கி.மீ தூரமும் மாணவியர்களுக்கு 15. கி.மீ தூரமும் 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 20.கி.மீ தூரமும் மாணவியர்களுக்கு 15. கி.மீ தூரமும் நடைபெறவுள்ளன.மேலும் இந்தியாவில் தயாரான சாதாரண மிதிவண்டிகளை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இப்போட்டியில் முதல் இடத்தை பெறும் மாணவ,மாணவியர்களுக்கு ரூ.5000 வீதமும், இரண்டாம் இடத்தை பெறும் மாணவ,மாணவியர்களுக்கு ரூ.3000 வீதமும், மூன்றாம் இடத்தை பெறும் மாணவ/ மாணவியர்களுக்கு ரூ.2000 வீதமும், நான்காம் இடம் முதல் பத்தாம் இடம் வரை பெறும் ஒவ்வொரு மாணவ,மாணவியர்களுக்கு ரூ.250 வீதமும் மொத்த பரிசு தொகை ரூ.70500 மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது.

இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ,மாணவியர்கள், அனைவரும் வருகிற 03.01.2025 அன்று மாலை 6 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அரங்கதிற்கு வருகை தந்து மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வழங்கப்படும் மருத்துவ தகுதி சான்றிதழ்கள் பெற்று பூர்த்தி செய்து அத்துடன் தங்கள் பெயரில் உள்ள வங்கி கணக்கின் முதல் பக்கத்தின் நகல், வயது சான்றிதழ், ஆதார் கார்டு ஆகியவைகளை சமர்பித்து தங்களுடைய பெயர்களை பதிவு செய்திட வேண்டும்.மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் டாக்டர்.வி.சேதுராஜன் அவர்களை 7401703482 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.