பதிவு:2024-12-31 11:35:56
திருவள்ளூரில் குரூப் 4 பணி காலியிடங்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :
திருவள்ளூர் டிச 31 : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்படவுள்ள குரூப் 4 பணி காலியிடங்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக தொடங்கப்பட உள்ளது.
மேற்காணும் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரிலோ, தொலைபேசி வாயிலாகவோ தங்களது விருப்பத்தினை கைபேசி எண்ணுடன் தெரிவிக்க வேண்டும்.
இந்த இலவசப் பயிற்சி வகுப்பு திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அலுவலக வேலை நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.30 மணி முதல் மதியம் 3.30 மணிவரை 03.01.2025 முதல் நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 97897 14244 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடையுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.