திருவள்ளூர் மாவட்ட ஊர்க்காவல் படை ஆளிநர் பணிக்கு வரும் 15 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

பதிவு:2025-01-04 13:09:00



திருவள்ளூர் மாவட்ட ஊர்க்காவல் படை ஆளிநர் பணிக்கு வரும் 15 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

திருவள்ளூர் மாவட்ட ஊர்க்காவல் படை ஆளிநர் பணிக்கு வரும் 15 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

திருவள்ளூர் ஜன 03 : திருவள்ளூர் மாவட்ட ஊர்க்காவல் படையில், காலியாக உள்ள 25 பணியிடங்களுக்கான (ஆண்கள்) ஆள் தேர்வு நடைபெறவுள்ளது. இப்பணிக்கு விருப்பமுள்ள ஆண்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கு விண்ணப்பதாரரின் வயது 20 முதல் 45 க்கு உட்பட்டு இருத்தல் வேண்டும்.10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்பதாரர் தமிழ்நாட்டை சேர்ந்தவராகவும், அவரது இருப்பிடமானது, திருவள்ளூர் மாவட்ட காவல் எல்லைக்குள் இருத்தல் வேண்டும்.மேலும் பொதுநல சேவை, தன்னார்வ தொண்டு செய்ய விருப்பமுடையவராக இருத்தல் வேண்டும்.

மேற்படி தகுதிகள் உள்ள அனைவரும் https://bit.ly/3zNfZoT என்ற இணைப்பில் உள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து,பிறப்புச் சான்றிதழ்,ஆதார் அட்டை,கல்வி தகுதிக்கான சான்றிதழ்கள், தற்போதைய புகைப்படம்-2 (Passport Size Photo) ஆகிய சான்றிதழ்களின் நகல்களை இணைத்து. திருவள்ளூர் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் நேரில் வந்து வரும் 15.01.2025 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.15.01.2025-க்குள் தக்க ஆவணங்களுடன் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.